Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோயம்புத்தூரில், கடந்த 11ஆம் தேதி அதிமுக கொடி கம்பம் சாய்ந்து, சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, இடதுகாலை இழந்துள்ள பெண்ணின் மருத்துவ செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
கோயம்புத்தூர் ராயல் கேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரியை சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின், திமுக சார்பாக 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இடதுகாலை இழந்த பெண்ணுக்கு செயற்கைக்கால் பொருத்தும் செலவை திமுக ஏற்கும் என்றார்.
பெண்ணின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து பேசிய கோயம்புத்தூர் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக அலுவலர் மருத்துவர்.கிருஷ்ணா ஆனந்த், ரத்த நாளங்கள் மற்றும் சதை பாதிக்கப்பட்டதால், ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இன்னும் சில நாட்களில், அவரது வலதுகால் எலும்பு முறிவுக்கான சிகிச்சை தொடங்கும் என்றும், பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறினார்.